பிள்ளை கனியமுதே
மே 14, 2008 ஆல் ரிஷி
எந்தாய்க்கு கசந்தது
இனித்தது எனக்கு.
எனக்கு கசந்தது
என் மகளுக்கு இனிக்கிறது.
பசிகள் மாறுகையில்
ருசிகளும் மாறும்.
——————————–
சின்னதாய் ஒரு குடில்.
அருகே ஒரு தென்னை.
கிளையில் தனியாய் நீலக்குயில்.
தூரமாய் ஒற்றை நிலா.
கால் நனைக்க அலையலையாய் கடல்.
கரடி பொம்மையுடன்
கரையில் நான்.
நான் வரைந்த ஒவியத்தைக் காண
இன்றேக்கேனும் சீக்கிரம் வருவாயா அப்பா?
——————————–